Tuesday, January 26, 2010

காதலை சொல்ல பயம் .... எது வரை...?!

அவன் பரத்வாஜ் BE படித்துக்கொண்டிருந்தான். அவள் பாவனா. அதே கல்லோரி.. அதே வகுப்பு. இருவரும் ஒரே ஸ்கூல் முதல் வகுப்பிலிருந்து இதோ கல்லோரி வந்தும் நல்ல நண்பர்கள். அவர்கள் குடும்ப நண்பர்கள் கூட.

பரத் மனதில் பாவனாவிற்க்கான காதல் டன் கணக்கில் இருந்தது. அவளின் அழகான தோற்றம் அவன் கண்களிலும் மனதிலும் நிறைந்திருந்தது. கவிதையாய் காதல் இருந்தாலும் காதலை விட மனதில் பயம் அதிகமாக இருந்தது. நம் காதலை அவளிடம் சொல்லி அவள் நான் உன்னிடம் நட்பாக தான் இருந்தென்னு சொல்லிட்டால்..?! ஐய்யோ..!! குடும்ப நட்பு கெட்டுவிட்டால்.. கடவுளே.. இப்படி எத்தனையோ சிந்தனைகள். சரி நல்ல படியா காலேஜ் ஐ முடிச்சுட்டு நல்ல வேலை ஐ பார்த்துட்டு சொல்லிக்கலாம். ரெண்டு குடும்பமும் நண்பர்கள் தானே பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தான்.

பாவனா இயல்பிலேயே பயந்த சுபாவம். ஒவ்வொரு பரீட்சைக்கு போகும்போதும் "பரத்.. இந்த paper எனக்கு clear ஆகாதுடா. படிச்சது எல்லாம் மறந்து போச்சு" என்று அழுவாள். பரத் தான் 100 சமாதானம் சொல்லி தோளை தட்டி ஹாலுக்கு கூட்டி போவான். இருவரின் பெயரும் alphabetical order ல் அடுத்து அடுத்து வரும். வினா தாளை பார்த்தவுடன் அவள் முகம் ப்ரகாசிக்கும். அவன் ஒகே என்று கண்களால் சொன்ன பிறகே எழுத தொடங்குவாள். நல்ல மார்க்கும் வாங்குவாள். இப்படி நன்றாக படித்த பரீ£ட்சைக்கே பயப்படும் பெண் காதலை எப்படி சொல்லுவாள்.?! தினமும் இன்றாவது பரத் என்னை காதலிக்கறேன்னு சொல்லனும்னு கடவுளை தான் வேண்டிக்கொண்டிருப்பாள். அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். என்றாவது ஒரு நாள் சொல்லுவான் என்ற நம்பிக்கையில் மௌவுனமாய் இருப்பாள்.

இப்படி இவர்கள் மௌனமாய் இருக்க காலம் கடந்து கொண்டேபோனது. ஆயிற்று 4 ஆண்டுகள் ஒடியே போனது. கல்லூரி வாழ்க்கையும் இனிதே முடிந்தது. இருவருக்கும் வெவ்வெரு நல்ல கம்பனிகளில் வேலையும் கிடைத்தது. பரத் கார் வாங்கினான். தான் ஆபிஸ் போகிற வழியில் பாவனாவையும் அவள் ஆபிஸில் விட்டுவிட்டு சென்றான். காரில் போகும்போது சில சமயம் FM இல் "மனதிலே உள்ள காதலை இறக்கி வைப்பது தொல்லையா..?!" போன்ற பாடல் வரிகளைக் கேட்க்கும் போது மௌவுனமாய் புன்னகைப்பர் இருவரும்.

ஒரு நாள் பாவனாவும் பரத்தும் வீட்டிற்க்குள் நுழைய பரத்/பாவனாவின் பெற்றொர் தம்பி தங்கை என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். நுழைந்தவர்களுக்கு பேரதிற்ச்சி காத்திருந்தது. அம்மாவே சொன்னாள் "பாவனாவிற்க்கு ஒரு வரன் வந்திருக்கு. பையன் மலேசியாவில் Engineer ஆ இருக்கான். நல்ல அழகாய் இருக்கிறான். நல்ல குடும்பம் என் friend பையன் தான். ஜாதகம் நல்லா பொருந்தி இருக்கு. அவாளுக்கு பாவனாவை பிடிச்சிருக்கு. பாவனா சரினு சொல்லிடிட்டால் அடுத்த மாசமே கல்யாணம்" அம்மா ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

ஐய்யோ அம்மா..!! வீட்டில் நானிருக்க உனக்கு அவளுக்கு வேறு ஒருவனை பார்க்க எப்படி அம்மா மனசு வந்துது. என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. பாழாய் போன பயம் உன்மையை சொல்ல விடாமல் தடுத்தது. "குட் அம்மா..!! உன் செலெக்ஷன் நல்லா தான் இருக்கும்" என்றான் பரத். அதிர்ந்தாள் பாவனா. நீ என்னை லவ் பண்ணுறேனு நினைச்சேனே. இல்லையா..?! தப்பா புரிஞ்ச்சுண்டேனோ..?! இனி என்ன செய்வது என்று தெரியாமல் உங்க இஷ்டம் என்றாள் அம்மாவிடம்.

சொன்னது போலவே ஒரு மாதத்தில் பாவனா திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்க்கு ஒரு வாரத்திற்க்கு முன்னால் பரத் அமெரிக்கா சென்றுவிட்டான். போனதிலிருந்து சரியாக வீட்டிற்க்கு போன் மெயில் செய்யவில்லை. பாவனாவை மறக்க முயற்சி செய்துகொண்டிருந்தான். முதலில் அப்பா போன் செய்து பேசினார். 6 மாதம் கழித்து அவரும் பேசவில்லை பரத்தும் பேசவில்லை. அமெரிக்கா வாசம் ஒராண்டு நிறைவுற்றது. கிளம்பி சென்னை வந்தான் பரத். வந்தால் வீடு களை இழந்து இருந்தது. அம்மாவின் அழுது அழுது வீங்கிய முகம் அப்பாவின் சோர்வு, பரத்தை மிகவும் கலவரப்படுத்தியது. என்ன என்று அவன் கேட்டது தான் தாமதம் அம்மா அழத்தொட்ங்கினாள்.

தம்பி சொன்னான். "அண்ணா..!! பாவனா அக்காவை கல்யாணம் பண்ணிண்டவன் ஒரு fraud. அவனுக்கு அங்க ஒரு மலேசிய பெண்ணுடன் தொடர்பாம். அக்காவை ஒரு வேலைக்காரி மாதிரி treat பண்ணியிருக்கான். passport/visa எல்லாத்தையும் வாங்கி வெச்சுண்டு அக்காவை அடிச்சு ரொம்ப மிரட்டி இருக்கான். 6 மாசம் முன்னாடி சிங்கப்பூரில் இருக்குற நம்ப சுரேஷ் அண்ணா எதேச்சையா மலேசியா போயிருக்குபோது அவா ஆத்துக்கு போனபோது தான் நடந்தது தெரிந்தது. அப்புறம் சுரேஷ் அண்ணா அவனிடம் சண்டைப்போட்டு passport/visa papers எல்லாம் வாங்கி பாவனா அக்காவை சென்னைக்கு அனுப்பி வச்சா. அப்புறம் போலீஸ் கேஸ் அது இதுனு போய் 2 நாளைக்கு முன்னாடி தான் mutual consent ல divorce வந்திருக்கு. விசாலம் மாமிக்கு divorce paper வந்ததும் ஒரே நெஞ்சு வலி. எங்க எல்லாருக்கும் மனசே சரி இல்லை அண்ணா" தம்பி சொல்ல சொல்ல நிலை குலைந்தான் பரத். "நான் தானேடா வரன் பார்த்தேன். இப்படி ஆகும்னு நான் கனவுல கூட நினைக்கலை. பாவனாவை பார்த்து பார்த்து மாமி மாமா படுற வேதனை எங்களால் பார்க்கவே முடியலை" என்றாள் அம்மா.

ஒரு 10 நிமிடத்தில் அனைவரும் பாவனா வீட்டிற்க்கு கிளம்பினர். கதவை திறந்தாள் பாவனா. "ஒளி இழந்த முகம்" இந்த வார்த்தைக்கு அர்த்த்ம் நன்றாக புரிந்தது பரத்திற்க்கு. அம்மாவின் மடியில் சாய்ந்து அழத்தொடங்கினாள் பாவனா. அம்மாவும் விசாலம் மாமியும் மாறி மாறி பாவனாவின் முன்னாள் கணவனை சபித்துக் கொண்டிருந்தனர் "படுபாவி.. பாவனா வாழ்க்கையை இப்படி பாழாக்கிட்டானே..." என்று.

"பாவனா வாழ்க்கையை பாழாக்கியது அவன் இல்லை. நான் தான்" என்று பரத் ஹால் அதிர கத்தினான். பாவனா உட்பட யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்.. தாழ் வெடிக்கத்தொட்ங்கியது. தொடர்ந்தான் பரத் " அம்மா..!! அவன் பாவனாவை கல்யாணம் பண்ணிண்டு துரோகம் பண்ணிணான். நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்காமல் துரோகம் பண்ணிணேன். பார்த்தால் நான் தானம்மா பெரிய துரோகி." என்னடா சொல்லுறே..?! என்றாள் அம்மா புரியாதவளாய்.

"அம்மா..!! ஸ்கூல், காலேஜ் எப்போலருந்துனு தெரியாது. ஆனால் வருஷ கணக்காய் அவளைக் காதலிக்கிறேன். இன்னுமும் கூட. ஆனால் சொல்ல தைரியம் இல்லம்மா. பயமாய் இருந்தது. ரொம்பவே பயமாய் இருந்தது. இன்று என் பயத்தால் இவள் வாழ்க்கை நாசமாய் போனதை என் கண்ணால் பார்க்கும் வரை பயம். அவள் மனதில் நான் இருக்கிறேன்னு தெரிந்தும் எனக்கு பயம். 1000 பயம் இருந்தது அம்மா..!! காதலை சொல்லாமல் அவளை இழக்க போகிறோம் என்ற பயத்தை விட காதலில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் தான் மேலோங்கி இருந்தது. நான் என் காதலை சொல்லாமல் போனால் அவள் திருமண வாழ்க்கை பாதித்து விடுமோ என்ற எண்ணம் மட்டும் எனக்கு ஏனோ வரவில்லை. அவளுக்கு அவனிடம் ஒரு காதல் வரவில்லை என்றால்..?! அவன் பாவனாவிடம் அன்பாய் இல்லை என்றால்..?! இப்படி எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. யோசித்திருந்தால் நிச்சயமாக இந்த நிலைமை வர விட்டிருக்க மாட்டேன்."

"அம்மா..!! என்னால் அவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. இனி அவ கஷ்டப்பட்டால் என்னால் அதை தாங்க முடியாது. நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டேன்." என்றான் பரத் தீர்க்கமாக. அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாய் இருந்தாலும் அவன் கருத்தை நிறைந்த மனதுடன் ஒத்துக்கொண்டனர்.

அழுது கொண்டிருந்த பாவனாவை நெருங்கினான். "அழதேடா. இனிமேல் எல்லாம் நல்லதா நடக்கும்" என்று தோளை தட்டிக்கொடுத்தான். இம்முறை தோழனாக அல்ல கணவனாக. வாழ்க வளமுடன்.

கற்றுகொடுக்க கற்றது

அபிநயா தனியார் கம்பணியில் வேலைப்பார்த்துக்கொண்டிருக்கிறாள். நல்ல திறமைசாலி. perfectionist. எல்லாம் நேரப்படி சரியாக நடக்க வேண்டும் என்ற சிந்தனைக்கொண்டவள். கணவன் அரவிந்த். இவர்களுக்கு ஒரு மகன் அனிருத் ஐந்து வயது. செல்லமாக அனி என்று அழைப்பார்கள்.

அபிநயா வேலையிலிருந்து வீட்டிருக்கு வர மணி 8 ஆனது. உள்ளே நுழையும் போதே ஏன் அரவிந்த் உஙக் office bag இங்க இருக்கு.?! வைக்க வேண்டிய இடத்தில வையுங்கோனு 100 தரம் சொல்லி ஆச்சு.. நீங்க கேக்குரதே இல்ல.. பாருங்கோ.. அனி நம்ள பாத்து தான் கத்துபான். "சாரிம்மா. இனிமேல் சரியா வைக்கறேன்." என்றான் அரவிந்த் டிவி பார்த்க்கொண்டே.

மணி 8 ஆகரது.. அனி .. நீ சாப்பிடச்சா..?! இல்ல அம்மா.. அந்த சமையல் மாமி சமைச்ச உப்புமா பிடிக்கல..நீ வேற பண்ணி குடு நான் சாப்பிடுறேன்.. வர வர உனக்கு நாக்கு ரொம்பவே நீளமாகிடுத்து.. சரி பொங்கல் ஒகே வா..?! சரிம்மா..

அரவிந்திடம் கேட்டாள் "நீங்க அப்பா அம்மா சாப்பிட்டாச்சா.?!". நானூம் அப்பாவும் சாப்பிட்டாச்சு. அம்மா இன்னும் சாப்பிடலை. "அம்மா..!! நீங்க என்ன சாப்பிட போறேள்..?!" என்று மாமியாரிடம் கேட்டாள். மாமியாரும் "அபி எனக்கும் பொங்கல் வெச்சுடுமா".. சரிமா என்று சொல்லிக்கொண்டே cooker இல் பொங்க்ல் வைத்தாள் அபி.

பொங்கலை வைத்துவிட்டு வந்து அரவிந்த் அருகில் சோபாவில் வந்து உட்கார்ந்தாள். "அரவிந்த்..!! வர வர office வீடு னு எல்லா இடத்துலையும் எனக்கு வேலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. அம்மாவுக்கு fracture ஆன அப்புறம் சமையல் மாமி சமைக்கறது அம்மாவுக்கு பிடிக்கறது இல்ல. அதனால தினமும் காலையில் ஒரு சமையல் சாயங்கலம் ஒரு சமையல்னு சரியா இருக்கு. பாருங்கோ. உங்க தம்பி, அம்மாவுக்கு fracture ஆன அப்புறம் இந்த 3 மாசமா வந்துகூட பார்க்கலை. அப்பா அம்மா இருந்த flat ஐ விற்க்கலாம்னு சொன்னவுடனே நீயும் மன்னியும் வேலை பார்கறெள். double earning. அதனால இந்த flat ஐ நானே எடுத்துக்கறேனு சொன்னான். நானும் சரினு சொன்னென். இப்போ அவனுக்கு நானும் வேலைக்கு போறேனு மறந்து போச்சா. அம்மாவை அவா ஆத்துக்கு கூட்டிண்டு போயி கொஞ்ச நாள் வெச்சுக்க சொல்லுங்கோ.." என்றாள்.

அரவிந்திற்க்கு என்ன சொல்வதென்றெ தெரியவில்லை. அபி சொல்வது நியாயமாகவே பட்டது. இருந்தாலும் அம்மாவிடம் போய் இதை எப்படி சொல்வது..?! போன வாரம் அம்மா சொன்னதை நினைத்து பார்த்தான். "அரவிந்தா..!! அபி மாதிரி வராதுடா. காலையில் எழுந்த உடனே சஹஸ்ரநாமம், பூஜை, சமையல்னு என்ன ஒரு சுறுசுறுப்பு. வீட்ட எப்படி வெச்சு இருக்கா பாரு. நான் ஏதாவது கேட்டால் கூட முகம் சுளிக்காமல் செய்யுறா. உன்கிட்டையும் குழந்தைகிட்டையும் என்ன ஒரு அனுசரனை. பார்க்கவே எனக்கும் அப்பாக்கும் மனசு நிறைஞ்சிருக்கு. இதே நான் உன் தம்பி ராஜா ஆத்துக்கு போனால் எப்போ பார்தாலும் அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே சண்டை. அவ வீட்டையும் clean ஆ வெச்சுக்க மாட்டா. குழந்தையும் போட்டு அடிப்பா. எங்க கிட்டையும் ஒரு வெறுப்பு. எனக்கு அங்க பாந்தமே படாது." என்றாள். இப்படியிருக்க அம்மாவை எப்படி அங்கு அனுப்பிவைக்க முடியும்.

யோசித்துக்கொண்டிருக்கும் போதே மணி 8:45 ஆகியிருந்தது. அதற்குள் அபி தனக்கே உரித்தான வேகத்துடன் எல்லா வேலைகளையும் முடித்திருந்தாள். ராத்திரி தூங்க போவதற்க்கு முன்னால் brush பண்ணிவிட்டு தூங்குவது வழக்கம். அதுவும் ஆயிற்று. "அனி வாடா.. டைம் அகிடுத்து. நீயும் வந்து brush பண்ணு என்றாள். உடனே அனி "அம்மா..!! நீ brush பண்ணிட்டியா" என்று கேட்டான். "ஆச்சுடா. அம்மா உன்னை ஏதுவும் செய்ய சொல்லறதுக்கு முன்னாடி அம்மா செஞ்ச்சுட்டு தான் சொல்லுவென். போடா..போ.. போய் brush பண்ணு" என்றாள்.

அபிநயாவிற்க்கு பொரி தட்டியது. ஒரு சின்ன பழக்கம் நைட் brush பண்ணுறது. அதுக்குகூட அவன் நீ பண்ணிட்டியானு கேக்கறான். இந்த பழக்கம் அனிக்கு வர நான் 6 மாசமா நான் night brush பண்ணுறேன். ஒவ்வொன்னும் அவன் நான் செய்தால் தான் கத்துக்கறான். அப்போ அப்பா அம்மாகிட்ட அவன் மரியாதையாய் பாசமாய் இருக்க..?!

அரவிந்த் bedroom க்குள் நுழைந்தான். உடனே அபிநயா "பாருங்கோ.. நீங்க ராஜா ஆத்துக்கு அப்பா அம்மாவை அனுப்ப வேண்டாம். அவா எப்போ போக நினைக்கறாளோ அப்போ போகட்டும். நம்ப போக சொல்ல வேண்டாம்." அரவிந்திற்க்கு ஒரே சந்தோஷ்ம். "ஏன் டா..?!" .. "அனிருத்.. நாளைக்கு என்ன பண்ணணுமோ அதை நான் இன்னிக்கே பண்ணறேன். அவனுக்கு கத்துக்குடுக்கறதுக்கு முன்னாடி நான் கத்துக்கறேன்." அரவிந்திற்க்கு ஏக சந்தோஷம்.

அனி brush பண்ணியிருந்தான். அபிநயா "அனி..!! இனிமேல் தினமும் பாட்டி தாத்தாவோட கொஞ்ச நேரம் spend பண்ணு. நைட் தூங்க போகறதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் பேசிட்டு வா." சரி என்றவன் பாட்டி தாத்தா ருமிற்க்கு போனான்.

அவன் வருவதற்க்குள் அபி தூங்கியிருந்தாள். வந்த அனிருதும் அரவிந்தும் அவளுக்கு கன்னத்தில் முத்தமிட்டு good night சொல்ல அபியின் நாள் இனிதே 9 மணிக்கு முடிந்தது.

சிறு(பெரு) சேமிப்பு

சேமிப்பு என்று கேட்டவுடன் நாம் சொல்லும் முதல் வார்த்தை ஐயோ அம்மா ரொம்ப கஷ்டம். இல்லை. நம்மால் முடியாது. இப்படி ஏதோ ஒரு இனம் புரியாத பயமோ பிரமிப்போ ஆதங்கமோதான் தோன்றும். நிஜத்தில் சேமிப்பு ஒன்றும் பெரிய கஷ்டமான விஷயம் இல்லை.

ஒரு குட்டி கதை சொல்கிறேன். ஒரு முறை எங்க அப்பாவை அவர் அலுவலக மேல் அதிகாரி தன் அறைக்கு வருமாறு அழைத்தார். எங்க அப்பா உள்ளே நுழைந்தவுடன் 'சார், என் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. நகை, சீர் எல்லாம் செய்தாகி விட்டது. திருமணம் நடத்த மட்டும் செலவுக்கு 2 - 3 லட்சம் தேவை படுகிறது. இந்த போஸ்ட் ஆஃபீஸ் ஆர்டியை எல்லாம் க்ளோஸ் பண்ணி செக் வாங்கணும். ஃபார்ம் ஃபில் பண்ணி வச்சு இருக்கேன். கொஞ்சம் பியூனை கூட்டிகிட்டு போயிட்டு வந்திடுங்க' என்றார். 'அதுக்கு என்ன சார் கண்டிப்பாக போய் வருகிறேன்' என்று சொல்லியவாறே அந்த ஃபைலை வாங்கினாராம் என் அப்பா. பைலைப் பிரித்து பார்த்தவருக்கு ஒரே அதிர்சி. என்னவென்றால் எல்லா ஆர்டியும் ரூ.50/100. ஒரே ஒரு ஆர்டி மட்டும் 250. இப்படி ஒரு 7 - 8 பாஸ் புக் இருந்ததாம். என் அப்பாவுக்கு மனதிற்குள் ஒரே நக்கல் சிரிப்பு. என்ன இவர் சிஏ படித்து இருக்கார். 50/100 ரூபாய் ஆர்டியை வைத்து லட்சமா.. ரொம்ப அதிகம் என்று நினைத்து கொண்டே போஸ்ட் ஆஃபீஸ் போனார். போஸ்ட் ஆஃபீஸ் அதிகாரி எல்லாவற்றையும் பார்த்து விட்டு கொஞ்சம் இருங்கள் நான் எல்லா ஆர்டியையும் குளோஸ் பண்ணிவிட்டு ஒரே செக்காகக் கொடுத்திடறேன் என்று சொன்னார்.. அரை மணி நேரம் கழித்து வந்து ஒரு செக்கை நீட்டினாராம்.. படிப்பவர்களும் மலைக்க வேன்டாம்.. 3.8 லட்சத்திற்கு செக் வந்தது.
அலுவலகம் நுழைந்தவுடன் என் அப்பா அந்த செக்கை தன் உயர் அதிகாரியிடம் நீட்டும் போது சொல்லியே விட்டாராம், சார் நீங்கள் ஃபைலை கொடுத்தவுடன் நான் நினைத்தேன் இந்த ஆர்டியை குளோஓஸ் பண்ணினால் 75 ஆயிரம் - 1 லட்சம் வரை வரும் என்று. கடைசியில் பார்த்தால் 3.8 லட்சம் நம்பவே முடியவில்லை சார் எப்பிடி நீங்கள் எப்பிடி சேமித்தீர்கள்?'
பாருங்கள் சார், நாம் எல்லாம் மிடில் கிளாசில் பிறந்தவர்கள். என் மகளின் திருமணம் என் கனவு. அதனால் அவள் பிறந்தது முதல் நான் சேமித்தேன் ஒரு வருடம் ரூ.50 ஆர்டி. அடுத்த வருடம் ரூ.100 இப்பிடி. இப்போது பாருங்கள் என் மகளின் திருமண செலவு பட்ஜெட் 3 லட்சம் (சில வருடங்கள் முன்) என்னிடம் 80 ஆயிரம் (30%) அதிகமாய் இருக்கிறது. அவளின் திருமணத்தில் நான் மேடையில் இருக்கும் போது அவளின் மண கோலத்தையும் வெட்கத்தையும் பூரிப்பையும் பார்த்து சந்தோஷமாய் மகிழ்ந்து என் கனவு மெய்ப்படுவதை கண்ணார கண்டு கொண்டிருப்பேன்.. இல்லை என்றால் கடவுளே எதிர்பார்த்ததை விட நிறைய பேர் சாப்பிட வருவார்களோ. பந்தியில் நிறைய வேஸ்ட் ஆகுமோ. கரண்ட் பில் நிறைய வருமோ இருக்கின்ற பணம் போதுமோ. இல்லை என்றால் யாரிடம் கடன் வாங்குவது என்றே யோசித்து கொண்டு . ஒரு கசப்பான / வருத்தமான மனநிலையில் என் மகளுக்கு அக்ஷதை போட வேண்டி இருக்கும். நல்ல ப்ளானிங் இருந்தால் மட்டுமே சில சந்தோஷங்களை கூட சந்தோஷமாய் அனுபவிக்க முடியும்' என்றராம்.
நிஜம்தான். நாம் இன்று இருக்கும் ப்ரைவேட் செக்டாரில் வேலை நிரந்தரம் இல்லை செலவுகள் அதிகம். சேமிப்பின் பயனை நாம் அறிந்து/புரிந்து/பயன்படுத்துவது மிக மிக அவசியம். நம் குழந்தைகளின் திருமணமோ அல்லது அயல் நாட்டு மேற்படிப்போ அவர்கள் என்ன ஆசை பட்டாலும் அதை தர கூடிய நிலையில் நாம் இருப்பது என்பது அவர்களிடம் நம் மரியாதையை உயர்த்துமோ தெரியாது ஆனால் 50 வயதில் நமக்கு பெரிய திருப்தியை நிச்சயம் தரும். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள் . ஒரு லட்சம் சேர 100 ஆயிரம் தேவை. 1 ஆயிரம் சேர 100 ரூ.10 தேவை. எனவே ரூ.10 முதல் ஆரம்பிப்போம் லட்சத்தை தொடும் லக்ஷியம் ஒன்றும் தூரத்தில் இல்லை.